ETV Bharat / city

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு- பொதுமக்கள் கவலை!

author img

By

Published : May 19, 2022, 7:25 AM IST

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் சிலிண்டர் விலை உயர்ந்ததையடுத்து இன்றும் (வியாழக்கிழமை) சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு- பொதுமக்கள் கவலை
சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு- பொதுமக்கள் கவலை

சென்னை: சமையல் சிலிண்டர் விலை மே7ஆம் தேதி ரூ.50 உயர்ந்த நிலையில், இன்று (மே19) மீண்டும் சமையல் எரிவாயு ரூ.3 உயர்ந்தது. அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ரூ.8 உயர்ந்து விற்பனையாகிவருகிறது.

தமிழ்நாட்டில் வர்த்தக உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2499இல் இருந்து ரூ.8 உயர்ந்து ரூ.2,507.50 ஆக உள்ளது.வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ 3 உயர்ந்து ரூ 1,018.50 ஆக விற்கப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை 43வது நாளாக மாற்றமில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.