ETV Bharat / city

இந்து சமய அறநிலையச் சட்டத்தை பின்பற்றியே அர்ச்சகர் நியமனம்!

author img

By

Published : Aug 18, 2021, 10:54 PM IST

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க உயர்மட்ட குழு ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே அர்சகர்களாக ஆலயங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

HC
HC

சென்னை : அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியது ஆகம விதிகளுக்கு முரணானது, குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும், ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகம விதிமுறைகளை மீறி அர்ச்சகரை நியமிக்கும் 38 கோயில்களின் அறிவிப்பாணைகளை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழ்நாடு அரசு பதில் மனு
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜி.ஜெயப்பிரியாவின் பதில்மனுவை தாக்கல் செய்தார்.

Hindu Religious and Charitable Endowments Department
இந்து சமய அறநிலையத்துறை
அந்த பதில் மனுவில், அந்தந்த கோவில் செயல் அலுவலர்களால் மட்டுமே அர்ச்சகர் நியமன நடைமுறைகள் நடைபெறுவதை புரிந்துகொள்ளாமல், தமிழ்நாடு அரசு நியமிப்பதாக அனுமானத்தின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விளக்கம்
கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றியே, கோயில் செயல் அலுவலர்கள் இந்த நியமன நடைமுறைகளை நடத்துவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Hindu Religious and Charitable Endowments Department
கோயில்
அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகுதியின் அடிப்படையில் விளம்பரத்தின் மூலம் மனுதாரரை அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், அவர்களும் விண்ணப்பிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
19 கோயில்களில் நியமனம் இல்லை
தமிழ்நாடு அரசு பல்வேறு கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் பல்வேறு பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிட்ட 37 கோயில்களில் 19 கோயில்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்காததால், யாரும் நியமிக்கப்படவில்லை என பதில்மனுவில் தெரிவித்துள்ளனர்.
Hindu Religious and Charitable Endowments Department
அமைச்சர் சேகர் பாபு
இதுவரை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பணியாளர் விதிப்படி, பல்வேறு கோயில்களில் தகுதி வாய்ந்த 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சில கோயில்களில் அர்ச்சகர்கள் ஓய்வு பெற்ற நிலையிலும் நிரப்பப்படாமல் உள்ளதால், ஓய்வுபெற்றவர்களையே தொடர்ந்து பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விசாரணை தள்ளி வைப்பு
மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள், நீதிமன்றத்தை நாடாமலேயே இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் அணுகி நியமனம் தொடர்பாக முறையிடலாம் என்ற விதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தை பின்பற்றியே அர்ச்சகர் நியமனங்கள் இருப்பதால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க : பிரதமர் வடிவில் தந்தையைப் பார்த்தேன்- பவானி தேவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.