ETV Bharat / city

5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை விற்க முயன்றவர் கைது

author img

By

Published : Jan 8, 2020, 8:37 AM IST

சென்னை: 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை விற்க முயன்றவரை வாட்ஸ்அப் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு கையும் களவுமாக கைது செய்தனர்.

ஐம்பொன் சிலை மீட்பு  சேலம் ஆத்தூர் ஐம்பொன் சிலை மீட்பு  சேலம் மாவட்டச் செய்திகள்  சிலைக்கடத்தல் போலீசாரின் ஸ்கெட்ச்  idol wing police arrested one man in salem who try to sell the precious idole
5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை விற்க முயன்றவர் கைது

சேலம் ஆத்தூரிலுள்ள கங்கவல்லி பகுதியில் ராஜசேகரன் என்ற ரியல் எஸ்டேட் தரகர் ஐம்பொன் சிலையொன்றை விற்க முயல்வதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர், காவலர் ஒருவரை சிலை வாங்கும் நபர் போல் நடிக்க வைத்து வாட்ஸ் ஆப் மூலம் ராஜசேகரனிடமிருந்து சிலை குறித்த தகவலைப் பெற்றுள்ளனர். சிலையின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என பேரம் பேசியுள்ளார். பின்னர், சிலையின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டதற்கு, அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜசேகரன், முன்தொகையாக 10 லட்சம் ரூபாயை செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கு சிலை வாங்கும் நபர் போல் நடித்த காவலரும் ஒப்புக்கொண்டு பத்து லட்சு ரூபாய் பணத்துடன் ராஜசேகரன் வீட்டிற்குச் சென்று கொடுத்துள்ளார். பத்து லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு சிலையை காட்டியபோது, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜராம் தலைமையிலான அலுவலர்கள் ராஜசேகரனை சுற்றி வளைத்து அவரிடமிருந்து சிலையைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தொல்லியல் ஆய்வாலர்கள் சிலையை ஆய்வு செய்ததில், இது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலையென்றும் பிற்காலச் சோழர்கள் காலச் சிலையாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

இந்தச் சிலை எந்த கோயிலுக்குச் சொந்தமான சிலை என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிலைக்குச் சொந்தமானவர்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை சிலைகள் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்கள் மற்றும் வழக்குகளில் இந்தச்சிலை குறித்து எந்தத் தகவலும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். ராஜசேகரன் இந்தச்சிலையை விற்கும் தரகராக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவருக்கும் சிலைக் கடத்தல் கும்பலுக்கும் ஏதேனும் நேரடித் தொடர்பு உள்ளதா என்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேசச் சந்தையில் இச்சிலையின் மதிப்பு 30 கோடியைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொழிலதிபரிடம் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி - இருவர் கைது!

Intro:Body:*சேலத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை விற்க முயன்றவரை வாட்ஸ்அப் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்*

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சேலம் ஆத்தூரில் உள்ள கங்கவல்லி என்ற பகுதியில் ராஜசேகரன் என்ற ரியல் எஸ்டேட் தரகர் ,கடந்த 3 மாதமாக ஐம்பொன் சிலையை விற்க முயல்வதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலையை வாங்கும் நபர் போல் காவலர் ஒருவரை நடிக்க வைத்து, ஐம்பொன் சிலையை மீட்டு உள்ளனர். முதற்கட்டமாக ராஜசேகரனை வாட்ஸ்அப் மூலமாக அணுகியுள்ளனர். சிலை குறித்து தகவல்களை வாட்ஸ் அப்பில் பரி மாறியுள்ளார். சிலையின் மதிப்பு 5 கோடி ரூபாய் என பேரம் பேசியுள்ளார். ராஜசேகரன் இடம் சிலையின் புகைப்படத்தை அனுப்புமாறு, சிலையை வாங்கும் நபர் கேட்டுள்ளார். சிலையின் புகைப்படத்தை அனுப்ப மறுத்த ராஜசேகரன், முன் தொகையாக 10 லட்ச ரூபாய் செலுத்துமாறு கேட்டுள்ளார். அதற்கு சிலை வாங்கும் நபர் போல் நடிக்கும் காவலர் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், ராஜசேகரன் வீட்டிற்கு பணத்துடன் சென்றுள்ளார். ராஜசேகரன் கையில் வைத்திருந்த ஐம்பொன் சிலையை காட்டியவுடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான படை சுற்றி வளைத்துப் பிடித்தது. அவரிடமிருந்து சிலையை மீட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்துள்ளனர். முதற்கட்டமாக பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலை என்பது தெரியவந்துள்ளது. அதன் வடிவமைப்பை வைத்து சோழர்கால பிற்கால சிலையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது என விசாரணை நடத்தி வருவதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் தெரிவித்துள்ளார். சிலைக்கு சொந்தமானவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இதுவரை சிலை மாயமானதாக கொடுக்கப்பட்ட புகார்கள் மற்றும் வழக்குகளில் இந்த சிலை குறித்து தகவல்கள் இல்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.ராஜசேகரன் இந்த சிலையை விற்பதற்கு தரகராக செயல்பட்ட எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிலையை யாருக்காக விற்பனை செய்ய முற்பட்டார்.இந்த சிலையை கடத்திய கும்பல் யார் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே இப்படிப்பட்ட சிலை கடத்தல் கும்பலுக்கு தொடர்புடையவர்களா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலையை வெளிநாட்டிற்கு விற்கவும் திட்டமிட்டு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் இந்த சிலையின் மதிப்பு 30 கோடிகளைத் தாண்டும் என தெரியவந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகளை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.