ETV Bharat / city

போராட்டத்தில் குதித்துள்ள அரசு மருத்துவர்கள்

author img

By

Published : Sep 19, 2022, 5:50 PM IST

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை அட்டையினை அணிந்தவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

போராட்டத்தில் குதித்துள்ள அரசு மருத்துவர்கள்
போராட்டத்தில் குதித்துள்ள அரசு மருத்துவர்கள்

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் வரும் 25ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பின் சார்பில் பாலகிருஷ்ணன், சாமிநாதன், அகிலன், சுந்தரேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையான அரசாணை எண் 354 மறுவரையறை, கடந்த 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய காலமுறை ஊதியப்பட்டை இன்று வரை நடைமுறைப்படுத்தாதது அரசு மருத்துவர்கள் இடையே மிகப்பெரும் வருத்தத்தையும், மனச்சோர்வையும் தந்துள்ளது.

பிற துறை மருத்துவமனைகள் கூட தயங்கிய நிலையில், மிகப்பெரிய கரோனா பேரிடரை அரசு மருத்துவர்கள் தியாக உணர்வோடும், அர்ப்பணிப்போடும் எதிர்த்து நின்று வெற்றி கண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மகுடம் சேர்த்தனர். மருத்துவர்களின் கோரிக்கைகளை கடந்த ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது நேரடியாக வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததுடன், ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் எனவும் அறிவித்தார்.

இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தபின்னரும், தமிழ்நாடு அரசு அரசாணை 354 மறுவரையறை செய்ய காலதாமதம் செய்கிறது. பொது சுகாதாரத்துறையில் எவ்வித நியாயமான அடிப்படையோ அறிவியல் காரணமோ இல்லாமல் தொழிலாளர் விதிகளுக்குப் புறம்பான வகையில் மருத்துவர்களின் பணி நேரத்தை நீடிக்கும் விதமாக அரசாணை எண் 225 வெளியிட்டு உள்ளது.

முதுகலைப் படித்தவர்களுக்கான இன்கிரிமென்ட்டுக்கு தனி அரசாணை வெளியிடாமல் உள்ளது. இதனை வெளியிட வேண்டும். மருத்துவர்கள் சேமநலநிதி DCF திட்டத்தில் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் முயற்சியால் இத்திட்டத்தில் 11,000 மருத்துவர்கள் சேர்ந்துள்ளனர். அதன் பிறகும் பயனாளிகளுக்கு சேம நல நிதி வழங்காமல் உள்ளனர்.

எனவே, சேமநலநிதியை உடனே வழங்கிட வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு எடுத்துரைக்கும் விதமாக கடந்த 12ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவர்களின் கோரிக்கை குறித்தும் இன்று நேரில் கேட்டறிந்தார்.

போராட்டத்தில் குதித்துள்ள அரசு மருத்துவர்கள்
போராட்டத்தில் குதித்துள்ள அரசு மருத்துவர்கள்

அப்போது மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நிதித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், நிதி நிலைமை சரியில்லை எனவும் தெரிவித்தார்.

கரோனா காலத்தில் தீவிரமாகப் பணியாற்றிய தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கேட்டபோது, அரசிடம் தெரிவித்துவிட்டு கூறுவதாகத் தெரிவித்தார். எனவே, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 25ஆம் தேதி ஞாயிறன்று சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.

போராட்டத்தில் குதித்துள்ள அரசு மருத்துவர்கள்
போராட்டத்தில் குதித்துள்ள அரசு மருத்துவர்கள்

இதையும் படிங்க: நெல்லை அரசு மருத்துவமனையில் ரத்தப்பரிசோதனை முடிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன - டீன் ரவிச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.