ETV Bharat / city

'ஜூன் 25-க்குள் கரோனா நிவாரணத்தொகை' - நுகர்வோர் பாதுகாப்புத் துறை

author img

By

Published : Jun 24, 2021, 7:04 AM IST

சென்னை: இரண்டாயிரம் ரூபாய், 14 வகை மளிகைப்பொருள்கள் நாளை (ஜூன் 25) தேதிக்குள் வழங்க நியாயவிலைக் கடைகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஜூன் 25ஆம் தேதிக்குள் கரோனா நிவாரணத்தொகை வழங்கல்
ஜூன் 25ஆம் தேதிக்குள் கரோனா நிவாரணத்தொகை வழங்கல்

கரோனா நோய்த்தொற்று காரணமாக அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண இரண்டாம் தவணை தொகை ரூ.2000, 14 வகை மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் 15ஆம் தேதிமுதல் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

சுற்றறிக்கை

இந்நிலையில், 'நிவாரணத்தொகை, மளிகைப்பொருள்கள் தொகுப்பினை ஜூன் 25ஆம் தேதிக்குள் விநியோகம்செய்து முடிக்கப்பட வேண்டும்' என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சுற்றறிக்கையை, அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, ரூ.2000, 14 வகை மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு நாளைக்குள் வழங்க நியாயவிலைக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: தனியார் பள்ளிகளில் ஜூலை 5 முதல் விண்ணப்பிக்கலாம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.