ETV Bharat / city

தஞ்சாவூர் தேர் விபத்து - மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவு - ஸ்டாலின்

author img

By

Published : Apr 27, 2022, 12:09 PM IST

தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் மின்சார விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மீட்பு பணிகளை துரிதப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக தஞ்சைக்கு விரைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப். 27) நடைபெற்ற சட்டபேரவைக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, இரங்கல் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய முதல்வர், "தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் உயிரிழந்தவருக்கு தலா 5 லட்சம் ரூபாய், உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக தஞ்சைக்கு விரைந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தை நேரில் சந்திக்க உள்ளேன். அதோடு காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளேன்" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினா்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து: சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.