ETV Bharat / city

மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மனு அளித்த கணவருக்கு கத்திக் குத்து

author img

By

Published : Aug 20, 2021, 9:03 PM IST

சென்னையில் பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்கக் கோரி காவல் நிலையத்தில் மனு அளித்த கணவரை, கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (32). இவரது மனைவி செளந்தர்யா (30). முரளி சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு முன்னர் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த வாரம் தனது மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி முரளி சங்கர்நகர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரு தரப்பினரையும் காவல் துறையினர் அழைத்தனர்.

இருதரப்பினர் இடையே மோதல்

அப்போது, சௌந்தர்யாவின் உறவினரான மகாலிங்கம் (30) என்பவருக்கும் முரளிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மகாலிங்கம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சிசிடிவி காட்சி

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் முரளியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த மகாலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காவல் துறையினர் கண் முன்னே வழக்கறிஞர்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.