ETV Bharat / city

விமானத்திற்குள் சிகரெட் பிடித்து ரகளை செய்த பயணி - சென்னையில் இறங்கியதும் கைதுசெய்த காவல் துறை!

author img

By

Published : Nov 10, 2021, 4:34 PM IST

Updated : Nov 10, 2021, 5:53 PM IST

Andhra Pradesh young man arrested for smoking on plane in Chennai
Andhra Pradesh young man arrested for smoking on plane in Chennai

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்திற்குள் சிகரெட் பிடித்து, ரகளை செய்த ஆந்திரா மாநிலப் பயணியை சென்னை விமானநிலைய காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை: குவைத்திலிருந்து சிறப்பு விமானம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில் 137 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனா். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அந்த விமானத்தில் ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த முகமது ஷெரீப் (57) என்பவரும் பயணித்துக் கொண்டிருந்தாா். இவா் குவைத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்துவிட்டு, தற்போது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

நடுவானில் புகைக்கத்தொடங்கிய பயணி

முகமது ஷெரீப் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் தனது இருக்கையில் அமா்ந்தபடி புகை பிடிக்கத் தொடங்கினாா்.
இதற்கு சகப்பயணிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் வந்து முகமது ஷெரீப்பைக் கண்டித்து சிகரெட்டை அணைக்க செய்தனா். ஆனால், முகமது ஷெரீப் சிறிது நேரத்தில் மீண்டும் புகைப்பிடிக்கத் தொடங்கினாா். அதைக் கண்டித்த சகப் பயணிகளையும், விமானப் பணிப்பெண்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக சொல்லப்பட்ட தகவல்
இதையடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகைப்பிடிக்கும் பயணி பற்றி புகாா் கூறினா். உடனடியாக விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். உடனடியாக விமானநிலையப் பாதுகாப்பு அலுவலர்கள் தயாரானாா்கள்.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும், பாதுகாப்பு அலுவலர்கள் விமானத்திற்குள் சென்று, புகைப்பிடித்து ரகளை செய்த பயணியை பாதுகாப்புடன் விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.

அத்தோடு பாதுகாப்புடன் குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளை முடித்த பின்பு, விமானநிறுவன அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.

அதன்பின்பு பயணியை சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல் துறையினர் அவரைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
இதையும் படிங்க: வீடியோ: கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் இருந்தவர்களை தூக்கி எறிந்த ஆடி கார்!

Last Updated :Nov 10, 2021, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.