ETV Bharat / city

பட்டப்பகலில் கத்தி முனையில் பணப்பறித்தவர்கள் கைது!

author img

By

Published : Jun 3, 2020, 1:44 PM IST

சென்னை: பட்டப்பகலில் தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

arrest
arrest

பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் மணி (45). தள்ளுவண்டி பழக்கடை நடத்திவரும் இவர், அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, பழம் வாங்குவது போல் சென்ற மூன்று பேர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

பயந்துபோன மணி கையில் வைத்திருந்த 750 ரூபாயைக் கொடுத்துவிட்டு தள்ளுவண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவந்துள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், இந்நிகழ்வு குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டில் பதுங்கியிருந்த ஜெயபிரகாஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கியிருந்த நவீன் குமார் மற்றும் பாலாஜி ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இருவரிடமும் இருந்து கத்தி, 750 ரூபாய் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பட்டப்பகலில் கத்தி முனையில் பணப்பறிப்பு!

பின்னர் மூவரிடமும் விசாரித்ததில், அவர்கள் ஏற்கனவே பல இடங்களில் கத்தியை காட்டி செயின் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்டதும், பல வழக்குகள் அவர்கள் மீது நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வன்முறையைத் தூண்டும் டிக் டாக் பதிவு: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.