ETV Bharat / city

தாய் மடியில் இருந்து தவறி விழுந்து 7 மாத குழந்தை பலி

author img

By

Published : Aug 12, 2022, 11:55 AM IST

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர்: பேரம்பாக்கம் அருகே உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த தம்பதி குணா-முத்தமிழ். கடந்த மாதம் 24 ம் தேதியன்று குணா, அவரின் மனைவி முத்தமிழ் குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக திருவள்ளூர் அடுத்த கேஜி கண்டிகையில் உள்ள பள்ளிக்கு லூவி டெரினா என்கிற 7 மாத பெண் குழந்தைகளுடன் சென்றுள்ளனர்.

தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும் போது பேரம்பாக்கம் சாலை வளைவில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது தாய் முத்தமிழ் தன் மடியில் வைத்திருந்த 7 மாத குழந்தை லூவி டெரினாவை தவற விட்டதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது குறித்து மப்பேடு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி சந்தேகப்பட்டதால் செல்போனில் வீடியோ வாக்குமூலம் அளித்து கார் ஓட்டுனர் தற்கொலை!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.