ETV Bharat / city

விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியவர்களின் ரூ.3.59 கோடி சொத்துகள் முடக்கம்

author img

By

Published : Apr 12, 2022, 8:37 AM IST

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும், ஹெராயின் மற்றும் ஆயுதக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்புடைய ரூ.3.93 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

அமலாத்துறை
அமலாத்துறை

சென்னை: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் கப்பல் மூலமாக கடத்தி வரப்பட்ட 300கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்களை கடலோர பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு கடந்த மே மாதம் ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.

தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை: இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் சுரேஷ், ரமேஷ் மற்றும் சௌந்திரராஜன் ஆகிய மூவர் தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை உட்பட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை நடத்தினர். குறிப்பாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரக்கூடிய இலங்கை தமிழரான சத்குணம் (எ) சபேசன் வீட்டில் நடத்திய சோதனையில் விடுதலை இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம்கார்டுகள், 7டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர்.

அமலாக்கத்துறை அதிரடி: இவரிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்த உடந்தையாக செயல்பட்டதும், விடுதலை புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்ட, ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சத்குணம், ரமேஷ், சுரேஷ், சௌந்திரராஜன் ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டு சேர்த்த ரூ.3.59 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

குறிப்பாக, ஆறு நிலம் தொடர்பான ஆவணங்கள், 12 வாகனங்கள், ரொக்கம் மற்றும் வங்கி வைப்பு நிதி என மொத்தம் ரூ.3.59 கோடி சொத்துகளை முடக்கி உள்ளதாக இன்று (ஏப்.11) அமலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டல்: 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் என்ஐஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.