ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்கப்பசை பறிமுதல் - 2 பெண்கள் கைது

author img

By

Published : Jun 15, 2022, 11:07 AM IST

Updated : Jun 15, 2022, 12:05 PM IST

இலங்கையிலிருந்து ரூ. 60 லட்சம் மதிப்பிலான தங்கப்பசை கடத்தி வந்த இலங்கையை சோ்ந்த 2 பெண் பயணிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

2 இலங்கை பெண்கள் கைது
2 இலங்கை பெண்கள் கைது

சென்னை: இலங்கையிலிருந்து சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது 2 விமானங்களிலும் வந்த, 2 பெண் பயணிகள் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த விமலா ராணி(27), ஜுவாணி(30) ஆகிய இரண்டு பெண் பயணிகள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர்.

ஆனாலும், அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க அலுவலர்கள் 2 பேரையும் மீண்டும் உள்ளே வரவழைத்தனர். பெண் சுங்க அலுவலர்கள் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவர்கனின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.61.75 லட்சம் மதிப்பிலான 1.33 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை சுங்க அலுவலர்கள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கையிலிருந்து ரூ.47.25 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது

Last Updated :Jun 15, 2022, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.