ETV Bharat / business

பொருளாதாரச் சிக்கலுக்கு காரணம் இதுதான்: நிதித் துறை இணையமைச்சர் விளக்கம்

author img

By

Published : Mar 10, 2020, 10:49 AM IST

ராய்ப்பூர்: இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு இரண்டு விவகாரம்தான் காரணம் எனக் குறிப்பிட்ட மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், அது என்ன காரணம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Anurag
Anurag

பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வுகளை வெளியிடும் சர்வதேச ஆய்வு நிறுவனமான மூடீஸ் அன்மையில் இந்தியா பொருளாதார நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், வரும் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.3 விழுக்காடாக குறையும் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில் மூடீஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை இந்தியச் சந்தையில் மந்தநிலையை மேலும் அதிகரிக்குமோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளார்களிடம் விளக்கமளித்தார். அதில் அவர், நாட்டில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கு சர்வதேச சூழலே முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டுவந்த வர்த்தகப் போர் சர்வதேச சந்தையை ஆட்டம்கான வைத்துள்ளது என்ற அனுராக், தற்போது கொரோனா வைரஸ் அபாயம் வர்த்தகத்தைக் கடுமையாக முடக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் சீரடைந்து அடுத்த சில மாதங்களில் இந்தியாவின் வர்த்தகம் மீண்டும் உத்வேகம் பெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்த அனுராக் தாக்கூர், நாட்டின் பொருளாதார மந்தநிலை தற்காலிக சிக்கலே எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி - இந்தியா எவ்வாறு லாபம் பெறும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.