ETV Bharat / business

ஜல்கான் வாழைப்பழத்தை அதிகம் ருசிக்கும் துபாய்வாசிகள்: புவிசார் குறியீட்டுக்கு கிடைத்த மவுசு

author img

By

Published : Jun 17, 2021, 12:21 PM IST

நடப்பாண்டில் 1.91 லட்சம் டன் வாழைப்பழங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 619 கோடி ரூபாயாகும்.

GI certified Jalgaon banana exported to Dubai
GI certified Jalgaon banana exported to Dubai

டெல்லி: புவிசார் குறியீடு பெற்ற வேளாண் விளைபொருட்களுக்கு பெரியளவில் ஏற்றுமதி சந்தை உள்ளது. அந்தவகையில் நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் நிறைந்த புவிசார் குறியீடு பெற்ற 'ஜல்கான் வாழைப்பழம்' பெருமளவு துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி கொள்கையின் அடிப்படையில், உற்பத்தியைப் பொறுத்து புவிசார் குறியீடுபெற்ற 22 மெட்ரிக் டன் ஜல்கான் வாழைப்பழங்கள் மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டம் தண்டல்வாடி கிராமத்தில் இருந்து ஏற்றுமதிக்குப் பெறப்படுகின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஜல்கான் வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீட்டு அங்கீகாரம் கிடைத்தது. இந்த அங்கீகாரத்தை நிசார்க்ராஜா கிரிஷி விக்யன் கேந்திரா என்னும் அமைப்பு பதிவு செய்தது.

அதிகரிக்கும் வாழைப்பழ ஏற்றுமதி

இந்தியாவினுடைய வாழைப்பழ ஏற்றுமதி, தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏனென்றால், நம் இந்தியர்கள் உலகத் தரத்துக்கு இணையாக தங்களது விவசாய உற்பத்தி நடைமுறைகளை பெருக்கிக்கொண்டதே இதற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய வாழைப்பழங்கள் எண்ணிக்கையிலும் அது ஈட்டித்தந்த வருமானத்திலும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 2018-19 காலகாட்டத்தில், 1.34 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் விற்பனை மதிப்பு ரூ.413 கோடி ஆகும். அதேபோல், கடந்த 2020-21 காலகட்டத்தில், 1.94 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் விற்பனை மதிப்பு ரூ.660 கோடி ஆகும்.

2020 -21 நடப்பாண்டில்( ஏப்ரல் - பிப்ரவரி), இந்திய ஒட்டுமொத்தமாக 1.91 லட்சம் டன் வாழைப்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்மதிப்பு ரூ.619 கோடி ஆகும்.

வாழைப்பழ உற்பத்தியை ஆர்வமுடன் செய்யும் மாநிலங்கள்

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களில், இந்தியா 25 விழுக்காடு வாழைப்பழங்களை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 70 விழுக்காடு வாழைப்பழங்கள் நாட்டிற்கு கிடைக்கின்றன.

விவசாயிகளுக்கு உதவும் ஆணையம்

விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA - Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)) என்னும் அரசின் அமைப்பானது ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான உதவிகளைப் பல்வேறு திட்டத்தின் கீழ் செய்து வருகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாடு, தர மேம்பாடு மற்றும் சந்தை மேம்பாடு ஆகியவற்றில் தேவையான உதவிகளை அரசின் இந்த அமைப்பானது செய்து வருகிறது.

கூடுதலாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யும் நாடுகளுடன் சர்வதேச விற்பனையாளர், வாங்குபவர்களுக்கான சங்கமங்கள், மெய்நிகர் வர்த்தக கண்காட்சிகளையும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.

இது தவிர வர்த்தகத்துறையின் மூலம் ஏற்றுமதி திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு, சந்தை முயற்சி போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் ஏற்றுமதியை ஆதரிக்கிறது.

இதையும் படிங்க:சர்ச்சையை கிளப்பிய திருவள்ளுவர் புகைப்படம்: காணாமல் போன காவி உடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.