ETV Bharat / briefs

'தேசியவாத காங்கிரஸார் கூட்டணிக்காக தேடிவந்தார்கள்'- பட்னாவிஸ்

author img

By

Published : Jun 24, 2020, 9:47 AM IST

புனே: தேசியவாத காங்கிரஸார் கூட்டணிக்காக தங்களை தேடிவந்தார்கள். ஆனால், சிவசேனாவுடனான கூட்டணியை முறிக்க பாஜக தலைவர்கள் விரும்பவில்லை என்று மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

ஃபட்னாவிஸ்
ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, கூட்டணிக்காக தேசியவாத காங்கிரஸார் எங்களை அணுகினார்கள்.
ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி உறவை முறித்துக் கொள்ள பாஜக தலைவர்கள் விரும்பவில்லை.
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை.
ஆனால், எதிர்க்கட்சி என்ற முறையில் சிவசேனா அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம்.
மாநிலத்தில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார். பாஜகவின் இயற்கை கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட சிவசேனா கடந்தாண்டு (2019) கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'சுயசார்ப்பு பொருளாதார திட்டம் இந்தியாவை மாற்றியமைக்கும்'- ஜே.பி. நட்டா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.