ETV Bharat / briefs

தற்கொலை செய்துகொண்ட குடிபெயர்ந்த தொழிலாளி!

author img

By

Published : Jun 27, 2020, 8:58 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அம்லோஹாரா பகுதியில் குடிபெயர்ந்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட புலம்பெயர் தொழிலாளி!
தற்கொலை செய்துகொண்ட புலம்பெயர் தொழிலாளி!

குஜராத் மாநிலம் சூரத்தில் வேலைபார்த்துவந்த குடிபெயர்ந்த தொழிலாளியான மணி சங்கர் என்பவர், ஊரடங்கின் காரணமாக தனது சொந்த ஊரான அம்லோஹாராவிற்குத் திரும்பினார். இந்நிலையில், இன்று திடீரென்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், அவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்பு: தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் காத்திருக்கின்றனர்.

உதவிக்கு அழையுங்கள்:

அரசு உதவி மையம் எண் - 104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.