கோவை தடாகம், சோமனூர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, மழையினால் பெரிதும் சேதமடைந்து இருக்கின்றன. இதனால் அந்தச் சாலைகளை மறுசீரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி கலந்துகொண்டு சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர், தடாகம் பகுதியில் மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதனிடையே அவரிடம் பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.