ETV Bharat / bharat

‘மரியாதையையே பெண்கள் விரும்புகின்றனர்’ - கனிமொழி எம்பி பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:09 PM IST

Women’s Reservation Bill: நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய கனிமொழி எம்பி, மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தொகுதி மறுவரையறை வரை காத்திருக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

WOMEN WANT TO BE RESPECTED NOT WORSHIPPED DMKS KANIMOZHI IN LOK SABHA
கனிமொழி எம்.பி

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று (செப். 19) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று (செப்.20) அந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதில், திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரது கருத்துக்களை முன்வைத்தார்.

அப்போது அவர், “இந்த மசோதா நாரி சக்தி வந்தான் மசோதா என்று அழைக்கப்படுகிறது. எங்களுக்கு வணக்கம் செலுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் வணங்கப்படுவதை விரும்பவில்லை. நாங்கள் பீடத்தில் இருக்க விரும்பவில்லை. உங்களது அம்மா மற்றும் சகோதரி என அழைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சமமாக மதிக்கப்படுவதையே விரும்புகிறோம். பீடத்தில் இருந்து இறங்கி சமமாக நடப்போம்” என்றார்.

முன்னதாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 2023 குறித்து மக்களவையில் தனது உரையைத் தொடங்கும் போது, பாஜக எம்பிகள் எதிர்ப்பு தெரிவிக்கத்த தொடங்கினர். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுப்ரியா சுலே, உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கனிமொழி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. அவரை பேச விடுங்கள் என அவருக்கு ஆதராவக குரல் எழுப்பினர். அப்போது கனிமொழி பாஜக எம்பிக்கள் குறித்து குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டின் மீது எங்களுக்கு உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கும் சொந்தமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்கு சொந்தமானது. இங்கு இருக்க எங்களுக்கு உரிமை உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, “அருண் ஜெட்லி கூறியதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன், பிரதிநிதித்துவம் மற்றும் பாகுபாடு நம் முகத்தை உற்று நோக்கும் வரை ஆண்களும் பெண்களுக்கான நீதியை உறுதிப்படுத்த முடியும் என்ற வாதம் பலவீனமடைந்துள்ளது. டோக்கனிசத்தின் அரசியல் இப்போது கருத்துகளின் அரசியலாக மாற வேண்டும். எனவே டோக்கனிசத்தை நிறுத்துங்கள்.

மசோதாவை சபையில் அறிமுகப்படுத்த 13 ஆண்டுகள் ஆனது. அதைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இந்து மதத்தில் காளி தெய்வம் எவ்வளவு தைரியமானவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சோனியா காந்தி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி இவர்கள் எல்லாம் எவ்வளவு தைரியமான தலைவர்கள்.

இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது குறித்து நானே பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன். எனது கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரே பதிலைத் தான் அளித்தார்கள். அவர்கள் மசோதா கொண்டு வருவதற்கு முன் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்கள். தற்போது என்ன ஒருமித்த கருத்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். இந்த மசோதா ரகசியமாக கொண்டு வரப்பட்டது, இதுகுறித்து என்ன விவாதங்கள் நடத்தப்பட்டது? இந்த அமர்வு எதற்காக அழைக்கப்பட்டது என்பதே எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தை காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர், “நாரி சக்தி வந்தான் ஆதினியம் 2023 மசோதாவுக்கு தனது ஆதரவை தெரிவித்த சோனியா காந்தி, அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று கோரினார்.

இந்த மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது, நாட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றார். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பட்டியலிடப்பட்ட சாதி (ஓபிசி/எஸ்சி) சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இது ராஜீவ்ஜியின் காந்தியின் கனவு மசோதா என்றார்.

இதையும் படிங்க: இந்தியா - கனடா இடையேயான உறவுகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.