ETV Bharat / bharat

ஐந்துமாடி கட்டடத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

author img

By

Published : Nov 1, 2022, 6:39 AM IST

பீகாரில் ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐந்துமாடி கட்டடத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
ஐந்துமாடி கட்டடத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து, நேற்று (அக் 31) பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து லக்கிசராய் மாவட்ட ஏஎஸ்பி சையத் இம்ரான் மசூத் கூறுகையில், “உயிரிழந்த பெண் தானாகவே விழுந்தாரா அல்லது வேறு ஏதாவது நடந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இச்சம்பவம் தொடர்பாக மற்றொரு பெண்ணிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பெண் உயிரிழப்பதற்கு முன்னதாக இந்த கட்டடத்தில் இரண்டு ஆண்கள் இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்” என்றார். மேலும் இந்த கட்டடத்தில் பாலியல் தொழில் நடந்து வருவதாகக் கூறி, கட்டடத்தை பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: கைதான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.