தெலங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார், ஸ்ரீலதா (28). இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு மன் திருமணம் நடைபெற்றத. சிவக்குமார், சானத் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
உடல் எடையால் தற்கொலை
சிவக்குமார், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மனைவி மிக குண்டாக இருப்பதால் உடலை எடையை குறைக்கச் சொல்லி அடிக்கடி சண்டை போட்டதாக தெரிகிறது. உடலை குறைப்பதற்காக ஸ்ரீலதா பெற்றோரிடம் ரூ. ஐந்து லட்சம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், விரக்தியடைந்த ஸ்ரீலதா,ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.