ETV Bharat / bharat

குஜராத் காவல் நிலையம் அருகே 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு

author img

By

Published : Mar 22, 2021, 6:25 PM IST

சூரட்: குஜராத் காவல் நிலைய வளாகத்தில் 4 வயதிற்குப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

குஜராத் காவல் நிலையம் அருகே 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு
குஜராத் காவல் நிலையம் அருகே 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு

குஜாரத்தில் கட்டோதரா காவல் நிலையம் ஒன்று இயங்குகிறது. இந்தக் காவல் நிலையத்தின் பின்புற பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டன.

இந்நிலையில், நேற்று பிற்பகல் காவல் வளாகததில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிரேன் உதவியுடன் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அப்போது, அங்கு சில மனித எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், அந்த எலும்புக் கூடுகளை கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வு நடத்தியதில் 3, 4 வயதுடைய குழந்தையின் எலும்புக் கூடாக இருக்கும் என தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தார்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ளும் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.