ETV Bharat / bharat

இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளது: சீன வெளியுறவுத்துறை!

author img

By

Published : Dec 13, 2022, 5:01 PM IST

அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் அருகே இந்திய - சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதென சீனா தெரிவித்துள்ளது.

Situation
Situation

டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகே உள்ள மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9ஆம் தேதி சீன ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகத் தெரிகிறது. அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியபோது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கடந்த 11ஆம் தேதி, இருநாட்டு ராணுவ வீரர்களும் அப்பகுதியிலிருந்து விலகி தங்களது இடத்துக்கு சென்றுவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சம்பவம் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இதையடுத்து எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஏற்கெனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு கமாண்டர்களும் அணிவகுப்பை நடத்தினர்.

இந்த நிலையில், இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதென சீனா தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இருநாட்டு எல்லைகளிலும் நிலைமை சுமூகமாக இருக்கிறது என்றும், எல்லைப் பிரச்னையை தீர்க்க இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

இதனிடையே இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் இந்திய- சீன வீரர்கள் மோதிக் கொண்டதில், இந்திய வீரர்களுக்கு பலத்த காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய ராணுவம் - சீனா இடையே மோதல்; எந்த வீரரின் உயிருக்கும் பாதிப்பில்லை - ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.