ETV Bharat / bharat

மனைவியை துண்டாக வெட்டிய கணவன்.. ஜார்க்கண்டில் கொடூரம்..

author img

By

Published : Dec 18, 2022, 11:45 AM IST

ஜார்க்கண்டில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மனைவியை துண்டாக வெட்டி கொலை செய்த கணவன்
மனைவியை துண்டாக வெட்டி கொலை செய்த கணவன்

சாஹிப்கன்ஜ்: டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்கு போலவே, பல வழக்குகள் சமீப காலமாக அதிகம் நடந்து வருகிறது. அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியைக் கொடூரமாக கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (டிச.17) மாலை வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. பெண்ணின் உடல் பாகங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மோப்ப நாய்களை கொண்டு தேடுதலில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறனர். கிடைத்த பாகங்களை வைத்து மருத்துவ குழு உடற்கூராய்வு மேற்கொண்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட தில்தார் அன்சாரி தலைமறைவாக உள்ளதால், அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்டவர், பஹாரியா பழங்குடியினத்தைச் சேர்ந்த ரூபிகா பஹாரியா என்பதும், இவர் குற்றம்சாட்டப்பட்ட தில்தார் அன்சாரியின் இரண்டாம் மனைவி என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் ரூபிகா காணாமல் போனதாக, அவரது உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தில்தார் அன்சாரியே கொலையை செய்திருப்பதை உறுதி செய்தனர். அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படங்க: அத்தையை 10 துண்டாக வெட்டி கொலை செய்த இளைஞர்.. ஜெய்ப்பூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.