ETV Bharat / bharat

மட்டன் சூப்பில் சோறு - ஹோட்டல் ஊழியரை கொலை செய்த இளைஞர்கள்

author img

By

Published : Nov 17, 2022, 7:08 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட மட்டன் சூப்பில் சோறு இருந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹோட்டல் ஊழியரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharatமட்டன் சூப்பில் சோறு - ஹோட்டல் ஊழியரை கொலை செய்த இளைஞர்கள்
Etv Bharatமட்டன் சூப்பில் சோறு - ஹோட்டல் ஊழியரை கொலை செய்த இளைஞர்கள்

புனே(மகாராஷ்டிரா): புனேவில் அமைந்துள்ள சவுதாகரில் உள்ள சரஸ்வதி மட்டன் உணவகத்திற்கு நேற்று (நவ-16) இரவு விஜய்ராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சாப்பிடுவதற்கு வந்தனர். அப்போது அவர்கள் மட்டன் சூப் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மட்டன் சூப்பில் சோறு கலந்துள்ளதாக அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் மங்கேஷ்(19), அஜித்(32) மற்றும் சச்சின் (22) ஆகியோருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கு வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் மங்கேஷ் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். மற்ற ஊழியர்களான அஜித் மற்றும் சச்சின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய விஜய்ராஜ் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் உடனே அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினர்.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மட்டன் சூப்புக்காக ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை சங்வி போலீஸார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கரூர் கழிவு நீர்த்தொட்டியில் மேலும் ஒருவரின் சடலம் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.