ETV Bharat / bharat

"மகிழ்ச்சியான நினைவுகள்" - அரசு பங்களாவை விட்டு வெளியேறுகிறேன் - ராகுல் காந்தி உதிர்த்த வார்த்தைகள்!

author img

By

Published : Mar 28, 2023, 1:42 PM IST

அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலகத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : கட்ந்த 2019 ஆம் ஆண்டு கார்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார்.

இதற்கு குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தது.

மேலும் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவை செயலகம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க் கட்சிகளின் தொடர் அமளியில் மேற்கொண்டு இயங்க முடியாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில், டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்யுமாறு மக்களவை செயலகத்தின் வீட்டு வசதிக் குழு நேற்று (மார்ச் 27) நோட்டீஸ் அனுப்பியது.

ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்ய வேண்டும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் அரசு பங்களாவை காலி செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி நோட்டீஸ் அனுப்பலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். மக்களவை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், "எனது தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதை நினைவூட்டியதற்காக மக்களவை செயலகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, நான் இங்கு கழித்த நேரத்தின் மகிழ்ச்சியான நினைவுகளுக்கு மக்களின் ஆணையாக நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன். எனது உரிமைகளுக்கு எந்த வித பாரபட்சமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நிச்சயமாக நான் கட்டுப்பட்டு நடக்கிறேன்" என அந்த கடிதத்தின் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்: காரணம் மத்திய அரசா? பஞ்சாப் அரசா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.