ETV Bharat / bharat

கலவரம் எதிரொலி - ஜோத்பூர் மாவட்டத்தில் இணைய சேவை முடக்கம்...!

author img

By

Published : May 3, 2022, 3:51 PM IST

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏற்பட்ட கலவரத்தின் எதிரொலியாக, ஜோத்பூர் மாவட்டத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Jodhpur
Jodhpur

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற மதக் கொடியேற்றும் நிகழ்வில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக மாறி, கல்வீச்சு தாக்குதல் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இதில் 5 போலீசார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியதாகத் தெரிகிறது. இதுபோன்ற வதந்திகள் மேலும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவையை முடக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

நள்ளிரவு 1 மணி முதல் இந்த உத்தரவு அமலில் உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இணைய சேவை முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் தொடர்ந்த தாக்குதல்!- லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் கைது!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.