கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு வரையிலான 450 கி.மீ. இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன 5) தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி நாட்டின் எரிவாயு பயன்பாட்டுக்கான திட்டவரைவை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், மத்திய அரசு தொடர்ச்சியாக நெடுஞ்சாலை, ரயில்வே, மெட்ரோ, குடிநீர், டிஜிட்டல், எரிவாயு என அனைத்தையும் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க தொடர் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. இவை நட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையாகும்.
ஒருபுறம் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை 32 ஆயிரம் கி.மீக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ளது. மறுபுறம் உலகின் மிகப்பெரிய ஹைபிரிட் மாற்று மின் உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் அமைக்கவுள்ளது. மேலும் பயோ எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்து அடுத்த பத்தாண்டுகளில் பெட்ரோலின் தேவையையும் குறிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம், எரிவாயு இறக்குமதி அளவு வெகுவாகக் குறைக்கப்படும். அனைவருக்கும் தூய்மையான, குறைந்தவிலை எரிசக்தியை வழங்குவதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் இனி வங்கிச் சேவை: பாங்க் ஆஃப் பரோடா அறிமுகம்