ETV Bharat / bharat

புதுச்சேரியில் சூதாட்ட நடன கிளப்பை சூறையாடிய பொதுமக்கள்

author img

By

Published : Dec 24, 2022, 11:05 AM IST

புதுச்சேரியில் மதுக்கடை மற்றும் சூதாட்ட நடன கிளப்பை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதை அடுத்து பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் சூதாட்ட நடன கிளப்பை சூறையாடிய பொதுமக்கள்!
புதுச்சேரியில் சூதாட்ட நடன கிளப்பை சூறையாடிய பொதுமக்கள்!

புதுச்சேரியில் மதுபான கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முத்தியால்பேட்டை பகுதியில் குடியிருப்புகளின் அருகே புதிதாக மதுபானம் மற்றும் சூதாட்ட நடன பார் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற கோரியும், அனுமதியை அரசு திரும்ப பெற கோரியும், கடந்த 11ஆம் தேதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் மதுக்கடை மற்றும் சூதாட்ட நடன கிளப்பை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதை அடுத்து போலீசார் குவிப்பு

இதனால் மதுபானக்கடை மற்றும் சூதாட்ட நடன கிளப் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் நேற்று (டிச.23) இரவு மதுபான கடையை திறக்க முயற்சி நடந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் திடீரென மதுக்கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மதுக்கடையை மூட கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆவேசத்தில் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, தொடர்ந்து அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் விவசாயி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.