ETV Bharat / bharat

மொட்டை வெயிலில் பயணிகள் அவதி : மொபைல் பேருந்து நிறுத்தம் உருவாக்கிய இளைஞர்கள்...

author img

By

Published : Dec 3, 2022, 7:29 AM IST

மொட்டை வெயிலில் பேருந்துக்காக கால் கடுக்க காத்து நிற்கும் பயணிகளுக்கு உதவும் வகையில் மொபைல் பேருந்து நிறுத்ததை உருவாக்கிய கேரள இளைஞர்களின் முயற்சி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்காலிக பேருந்து நிறுத்தம்
தற்காலிக பேருந்து நிறுத்தம்

காச்ர்கோடு (கேரளா): கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சிறிய டவுன் பெரியா. சாலை பணிகளை மேற்கொள்ள அவ்வூரில் உள்ள இருந்த பேருந்து நிறுத்தத்தை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றியதாக கூறப்படுகிறது.

மொட்டை வெயிலில் கால் கடுக்க முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து மொபைல் பேருந்து நிறுத்தத்தை உருவாக்கினர்.

பயணிகளின் அவதியை போக்க உருவான தற்காலிக பேருந்து நிறுத்தம்

இருசக்கர வாகனம் மூலம் இழுத்துச் செல்லக்கூடிய வகையில், டயர்கள் பொருத்தி தற்காலிக பேருந்து நிறுத்தத்தை இளைஞர்கள் சேர்ந்து 10 நாட்களில் உருவாக்கி உள்ளனர். தேவைக்கேற்ப தற்காலிக பேருந்து நிறுத்தத்தை வெவ்வேறு இடங்களில் நகர்த்திச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:Watch: பேருந்தில் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் பறிப்பு - கதறி துடித்த பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.