ETV Bharat / bharat

2 மீட்டர் தூரத்தில் 41 உயிர்கள்! 4 மணி நேரத்தில் மீட்பு பணி நிறைவு? - தேசிய பேரிடர் மீட்பு படை கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 6:13 PM IST

2 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

NDMA
NDMA

உத்தரகாசி : உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு 17 நாட்களாக வெளியே வர முடியாமல் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பண்யில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியின் 16 வது நாளான நேற்று (நவ. 27) இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது.

ஏறத்தாழ 24 மணி நேரம் தொடர்ந்த இந்த பணியில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, எலிவளை சுரங்க முறையில் துளையிட்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் 2 மீட்டர் தூரத்தில் சிக்கி உள்ளதாகவும் விரைவில் மீடக்ப்படுவார்கள் என்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிரிவித்து உள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க 3 முதல் 4 மணி நேரமாகும் என்றும், மீட்கப்படுபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுரங்கத்தின் அருகே தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், சுரங்கத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமுதாய சுகாதார மையத்தில் 41 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவசர உதவிகளுக்கு இந்திய விமானப் படையின் சின்னூக் ரக ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

அவசர சிகிச்சை தேவைப்படும் தொழிலாளிகள் உடனடியாக சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தவிர்த்து, இந்திய ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகளும் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கு - சந்திரபாபு நாயுடுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.