ETV Bharat / bharat

தேசிய சின்னம் சர்ச்சை: அசல் சின்னத்தை வடிவமைத்த குடும்பத்தினர் வெளியிட்ட சான்றுகள்!

author img

By

Published : Jul 14, 2022, 9:43 PM IST

புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் மேற்கூரையில் நிறுவப்பட்டுள்ள தேசிய சின்னம் குறித்த சர்ச்சைக்கு, அதன் அசல் சின்னத்தை வடிவமைத்த குடும்பத்தினர் சில சான்றுகளை வெளியிட்டுள்ளனர்.

தேசிய சின்னம் சர்ச்சை: அசல் சின்னத்தை வடிவமைத்த குடும்பத்தினர் வெளியிட்ட சான்றுகள்!
தேசிய சின்னம் சர்ச்சை: அசல் சின்னத்தை வடிவமைத்த குடும்பத்தினர் வெளியிட்ட சான்றுகள்!

இந்தூர் (மத்தியபிரதேசம்): புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் மேற்கூரையில் 9,500 கிலோ எடையும், ஆறரை மீட்டர் உயரமும் கொண்ட தேசிய சின்னத்தின் சிலையை, பிரதமர் மோடி கடந்த ஜூலை 11 அன்று திறந்து வைத்தார். இச்சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சின்னத்தை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையில் இரும்பிலான அடித்தளமும் கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய சின்னமாக விளங்கும் அசோக முத்திரை, முதலில் அசோக பேரரசரால் புத்தரின் அமைதி கொள்கையை பரப்பப் பயன்படுத்தப்பட்டது. இந்த அசோக தூண்களின் மேல் பகுதியில் காணப்படும் நான்கு சிங்கங்கள் தைரியம், வலிமை, நம்பிக்கை மற்றும் பெருமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. மேலும் சிங்கங்கள் நிற்கும் ஒரு வட்ட வடிவ அபாகஸ் காளை, குதிரை மற்றும் யானையின் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஓவியர் தினாநாத் பார்கவாவின் மனைவி பிரபா பார்கவா
ஓவியர் தினாநாத் பார்கவாவின் மனைவி பிரபா பார்கவா

முத்திரையின் முக்கியத்துவம்: பாஸ்போர்ட் முதல் ரூபாய் நோட்டுகள் வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அதிகாரப்பூர்வ ஆவணத்திலும் அசோக தூண் உள்ளது. இந்திய கொடி கூட அசோகருக்கு மரியாதை செலுத்துகிறது. ஏனெனில் அசோக சக்கரம் கொடியின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. வடக்கே தக்சிலாவிலிருந்து கோதாவரி நதி, ஸ்வர்ணகிரி மலைகள் மற்றும் தெற்கே மைசூரு வரை பரவியிருந்த அசோகப் பேரரசர் ஏற்றுக்கொண்ட போர்த்திறன் மற்றும் அமைதிக் கொள்கையை இந்தச் சின்னம் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

ஆனால், புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசிய சின்னத்தின் அசல் வடிவமைப்பை மத்திய அரசு சிதைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கின. இந்நிலையில், இந்தியாவின் அசல் தேசிய சின்னத்தை வடிவமைத்த குழுவில் ஒரு இணை கலைஞரான ஓவியர் தினாநாத் பார்கவாவின் மனைவி பிரபா பார்கவா (85), ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக தகவலை அளித்துள்ளார்.

தினாநாத் பார்கவா: இவர் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பெதுல் நகரைச் சேர்ந்தவர். இந்திய அரசியலமைப்பின் கையெழுத்துப் பிரதியை அலங்கரிக்கும் தேசிய சின்னத்தை வடிவமைத்த குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். உத்தரபிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் கி.மு.250க்கு முந்தைய பழங்கால சிற்பமான 'அசோகாவின் சிங்கத்தின் தலைநகரம்' இக்குழுவினரால் ஈர்க்கப்பட்டது.

தேசிய சின்னம் சர்ச்சை: அசல் சின்னத்தை வடிவமைத்த குடும்பத்தினர் வெளியிட்ட சான்றுகள்!

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, அரசியலமைப்பின் அசல் பிரதியை வடிவமைக்கும் பணியை ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனின் கலா பவன் முதல்வரும், பிரபல ஓவியருமான நந்தலால் போஸிடம் கொடுத்தார். ஓவியர் போஸ், அசோக் சின்னத்தின் படத்தை உருவாக்கும் பணியை தினாநாத் பார்கவாவிடம் ஒப்படைத்தார். அப்போது தினாநாத், சாந்திநிகேதனில் பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 24, 2016 அன்று தனது 89 வயதில் இந்தூரில் தினாநாத் மரணமடைந்தார்.

அசல் ஓவியம் இதுதான்: இதுகுறித்து ஓவியர் தினாநாத் பார்கவாவின் கூறுகையில், “அசல் அசோக தூணில் செய்யப்பட்ட சிங்கங்கள் அமைதியை விரும்புபவர்கள். புதிய தூணில் சிங்கங்களின் வாய்கள் ஆக்ரோஷமாகத் திறந்திருப்பதால், அவை கடுமையான வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியல் சட்டத்தின் முதல் பக்கத்தில் படம் பயன்படுத்தப்படுவதால், சிங்கங்களை அப்படி வரைய வேண்டும் என்று மனதில் வைத்திருந்தார்.

அவை அமைதியை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். சமீபத்தில் செதுக்கப்பட்ட சின்னத்தில் சிங்கங்கள் மூர்க்கத்தனமாக காட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால்தான் இந்த சர்ச்சை. நான் பார்க்கவில்லை என்றாலும், அவர்கள் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

இந்த ஓவியப் பணியை நிறைவேற்றுவதற்காக, கல்கத்தாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க தினாநாத் பார்கவா மூன்று மாதங்கள் சென்றுள்ளார் எனவும், "அழகான மற்றும் நம்பிக்கையான" அசோக சிங்கங்களுக்கு பதிலாக, அச்சுறுத்தும் மற்றும் ஆக்ரோஷமான தோரணை கொண்டவைகளை மத்திய அரசு கொண்டு வருவதாகவும் பிரபா குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில் பார்கவா வரைந்த அசல் படத்தை அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர். பிரபா தனது கணவர் வரைந்த படத்தில், "சிங்கம் தனது பெண் மற்றும் குழந்தையுடன் அமைதியாக அமர்ந்திருப்பது போல் தெரிகிறது. ஏனெனில் இந்த படத்தை சின்னத்தில் பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பின் இந்த காரணத்திற்காக, அவர் அந்த நேரத்தில் சிங்கங்களின் அமைதியான உள்ளுணர்வை அவரது இந்த அரிய படத்தில் இணைத்தார்.

புதிய கட்டட கலைஞர் கூறுவது என்ன? பிரபாவின் கூற்றுப்படி, தங்க இலைகளால் வர்ணம் பூசப்பட்டது. மேலும் சிங்கங்களின் வாய்கள் சற்று திறந்திருக்கும். அவற்றின் பற்களும் தெரியும். ஓவியத்தின் அடிப்பகுதியில் தங்கத்தில் 'சத்யமேவ் ஜெயதே' என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து தினநாத்தின் மருமகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை, மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள கலைக்கூடம், இடம் அல்லது அருங்காட்சியகத்தை பாதுகாக்க தீனாநாத் பார்கவாவின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரினார்.

ஆனால், "இந்தப் பிரச்சனையில் பல தலைவர்கள் குடும்பத்தினருக்கு உறுதியளித்த போதிலும், இந்த கோரிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை," என்று பிரபா கூறினார். அதேநேரம் புதிய தூணின் கட்டடக் கலைஞர் சுனில் தியோர், தான் மிகக் குறைவான மாற்றங்களைச் செய்ததாகக் கூறுகிறார். மேலும் இது அசல் வேலையைப் போலவே 99 சதவிகிதம் உள்ளது எனவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வெண்கல தேசிய சின்னம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.