ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் ராணுவத் தளபதி ஆய்வு

author img

By

Published : Oct 19, 2021, 5:04 PM IST

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவத் தளபதி முகுந்த் நரவனே ஆய்வு மேற்கொண்டார்.

Army Chief General Naravane
Army Chief General Naravane

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கு கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ராணுவத் தளபதி முகுந்த் நரவனே பூஞ்ச் பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

மேலும், மற்ற எல்லைப் பகுதிகளையும் நரவனே பார்வையிட்டார். இம்மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கராவத தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரத்தில் மட்டும் பொது மக்கள் 11 பேர் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. ஜம்மு காஷ்மீர் காவல் தலைவருடன் தேசிய புலனாய்வு முகமை உயர் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.

  • General MM Naravane #COAS visited forward areas of #WhiteKnight Corps & undertook a first-hand assessment of the situation along the Line of Control. #COAS was briefed by commanders on the ground about the present situation & ongoing counter-infiltration operations.#IndianArmy pic.twitter.com/2c9uKC04SY

    — ADG PI - INDIAN ARMY (@adgpi) October 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை மக்களான இந்துக்கள், சீக்கியர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். மக்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றன.

இதையும் படிங்க: இந்தியா- பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி தேவையா?- அசாதுதீன் ஒவைசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.