ETV Bharat / bharat

சிறையில் சாத் பூஜை செய்யும் முஸ்லீம் பெண் கைதிகள்

author img

By

Published : Oct 26, 2022, 10:48 PM IST

சிவான் சிறையில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும், பெண் கைதிகள் நம்பிக்கையின் திருவிழாவான சாத் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளைச் சிறை நிர்வாகம் தொடங்கியுள்ளது.

சாத் பூஜை செய்யும் முஸ்லீம் பெண் கைதிகள்
சாத் பூஜை செய்யும் முஸ்லீம் பெண் கைதிகள்

சிவான்: பிகாரில் உள்ள சிவான் சிறையில் உள்ள முஸ்லிம் பெண் கைதிகள் சிறைக்குள் சாத் பூஜை செய்ய, சிறை நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பூர்வாஞ்சல் (கிழக்கு உ.பி. மற்றும் பீகார்) மக்களிடையே பிரபலமான பண்டிகையான சாத் பூஜை அக்டோபர் 30 - 31 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்துப் பெண்கள் இந்த விழாவில் முழங்கால் அளவு தண்ணீரில் அர்க்யா செய்கிறார்கள்.

சிவான் சிறையில், மத நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் முஸ்லிம்கள் உட்பட 15 பெண் கைதிகள் சாத் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்காகப் பூஜை பொருட்கள் முதல் ஆடைகள் மற்றும் அலங்காரங்கள் வரையிலான ஏற்பாடுகளுக்குச் சிறை நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. சிறைக்குள்ளேயே பெண்கள் அர்க்யா செய்வதற்கு வசதியாக சிமெண்ட் பூசப்பட்ட குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிவான் சிறையில் அடைக்கப்பட்ட ருக்சானா, சாத் பூஜை செய்யும் ஒரு முஸ்லிம் பெண் கைதி ஆவார். ருக்சானா 2021 ஆம் ஆண்டு சாத் திருவிழாவிற்காகச் சபதம் செய்து சாத் விரதத்தை கடைப்பிடித்தார். அதை அவர் இந்த முறையும் மீண்டும் செய்வார். சிறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் கூறுகையில், இம்முறை சத்வ்ராதி பெண்கள், சில முஸ்லிம் பெண்கள் உட்பட 15 பேர் சத் பூஜை செய்ய உள்ளனர்.

சிறையில் உள்ள சத்விதியர்களுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாத வகையில், குளத்தில் சிறை நிர்வாகத்தின் மூலம் விளக்கேற்றி, பூஜைக்கு புதிய ஆடைகள் வழங்கப்படும்,'' என்றார். 2021 ஆம் ஆண்டில் அதிகமான கைதிகள் சத் பண்டிகையைக் கொண்டாடியதாக சஞ்சீவ் குமார் கூறினார்.

இதையும் படிங்க: சார் தாம் யாத்ரா முடிவு; கங்கோத்ரி தானின் கதவுகள் மூடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.