ETV Bharat / bharat

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்! போலீஸ் பாதுகாப்பு!

author img

By

Published : Mar 20, 2023, 6:52 AM IST

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து அவரது மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் அளித்த புகாரில், மும்பை போலீசார் பஞ்சாப் ராப் பாடகர் சித்து மோஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சல்மான் கான் வீடு முன் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து கடந்த 18ஆம் தேதி மின்னஞ்சல் வந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மிரட்டல் மின்னஞ்சலை கண்டு அதிர்ந்து போன சல்மான் கானின் மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கர், நேற்று (மார்ச்.19) புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். பிளாக்பக் வகை மானை சுட்டுக் கொன்று தங்களது சமுதாயத்தின் நம்பிக்கைகளை சல்மான் கான் அவமரியாதை செய்ததாகவும், அவர் மற்றும் சல்மான் கானின் தந்தை சலீம் கானின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நேர்காணில் கலந்து கொண்டு பேசிய லாரன்ஸ் பிஷ்னாய், "தங்களது சமுதாய நம்பிக்கைகளை அவமரியாதை செய்த சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகியோரை கொலை செய்வேன்" என மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மும்பை போலீசார் லாரன்ஸ் பிஷ்னாய், அவரது கூட்டாளி கோல்டி பிரார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி பிரபல ராப் பாடகர் சித்து மூஸ்வாலா பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தில் வைத்து கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னாயின் கூட்டாளி கோல்டி பிராரை வெளிநாட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர், இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.

அந்த கடிதத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டது போல் தங்களுக்கும் நடக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை கொண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லாரன்ஸ் பிஷ்னாயின்ம் கு

இதையும் படிங்க: பஞ்சாப்பில் நாளை வரை இணைய சேவை முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.