ETV Bharat / bharat

பிறந்தநாள் விழா என்று கூறி 12 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

author img

By

Published : May 16, 2022, 10:24 PM IST

பிறந்தநாள் விழா என்று கூறி, 12 வயது சிறுமிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Marriage
Marriage

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி குடா கிராமத்தில் வசித்து வரும் எல்லம்மா- கோபால் தம்பதியினர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், எல்லம்மா- கோபால் தம்பதியினர் தங்களது 12 வயது பெண் குழந்தைக்கு பிறந்தநாள் என்று கூறி விழா ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விழாவில் சிறுமிக்கு 35 வயது ஆணுடன் குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் நடந்து முடிந்த பிறகே சிறுமிக்கு இதுகுறித்து புரிந்துள்ளது.

தனக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டதை அறிந்த சிறுமி, அங்கிருந்து தனது உறவினர் வீட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்ற பெற்றோர், சண்டையிட்டு சிறுமியை அழைத்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த குழந்தைகள் நல மேம்பாட்டு அதிகாரி ஒருவர், போலீசில் புகார் அளித்தார். பின்னர் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த குழந்தைத் திருமணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிப் டாப் உடை அணிந்து சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.