ETV Bharat / bharat

வீடு வீடாக சென்று பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை - தெலங்கானா அமைச்சர் ஹரிஷ் ராவ்!

author img

By

Published : Jul 25, 2022, 10:03 PM IST

தெலங்கானாவில் வீடு வீடாக சென்று பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Rao
Rao

தெலங்கானா: தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ், பருவகால நோய்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "பருவகால நோய்களைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரசு அலுவலகங்களில் பருவகால நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்த அதிகாரிகளுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: COVID 19: இந்தியாவில் புதிதாக 16, 866 பேருக்குத்தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.