ETV Bharat / bharat

ஸ்மார்ட்போன் மோகம்.. தாய் கழுத்தை நெரித்து கொலை.. போலீசாரிடம் தற்கொலையென புகார்..

author img

By

Published : Feb 17, 2023, 4:13 PM IST

maharashtra 17 year old son killed mother due to mobile addiction
maharashtra 17 year old son killed mother due to mobile addiction

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஸ்மார்ட்போன் மோகத்தால் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஊர்லி காஞ்சன் என்னும் பகுதியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் அவரது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காரணத்திற்காக இன்று (பிப். 17) கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புனே போலீசார் கூறுகையில், ஊர்லி கஞ்சன் பகுதியை சேர்ந்தவர் ஜமீர் ஷேக். இவரது மனைவி தஸ்லிம் ஜமீர் ஷேக் மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மகனுடன் வசித்து வந்தார்.

இதில், தஸ்லிம் ஜமீர் ஷேக், பிப்ரவரி 15ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இவரது உடற்கூராய்வின் முடிவில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது கொலையாக இருப்பதற்கான அறிகுறிகள் உடலில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனடிப்படையில், ஜமீர் ஷேக் மற்றும் அவரது 17 வயது மகனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினோம். முதலில் ஜமீர் ஷேக்கிடம் நடத்திய விசாரணையில் அவர், தனது மனைவி தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் தான் நமாஸ் செய்ய சென்றுவிட்டதாகவும், வீடு திரும்புகையில் அவரது உடலை மட்டுமே பார்த்தாகவும் தெரிவித்தார்.

அதோடு அந்த நேரத்தில் தனது மகன் மட்டுமே அவருடன் இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து மகனிடம் விசாரணை நடத்தினோம். அப்போது திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. அதாவது சம்பவ நாளன்று, இவர் நீண்ட நேரமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தியுள்ளார். இதனால் தாயார் தஸ்லிம் ஸ்மார்ட்போனை பிடிங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இவர் தஸ்லிமை சுவற்றில் தள்ளி விட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி தஸ்லிம் கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து கொலையை மறைக்க முதலில் மணிக்கட்டை அறுத்து தற்கொலையென வெளியே சொல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், உயிர் பிரிந்த உடலில் இருந்து ரத்தம் வரவில்லை. இதனால், வீட்டில் இருந்த கயிற்றை மின்விசிறியில் கட்டிவிட்டுள்ளார்.

இதையடுத்து தந்தை வீட்டிற்கு வந்த உடன் தாய் தற்கொலை செய்துகொண்டாதகவும், உடலை மின்விசிறியில் இருந்து தான் கீழே இறக்கியதாகவும் தெரிவித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி - வெளியான திடுக்கிடும் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.