ETV Bharat / bharat

தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் இல்லை - மாநகராட்சி நிர்வாகம் கெடுபிடி

author img

By

Published : Nov 9, 2021, 12:29 PM IST

ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என தானே மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Maharashtra
Maharashtra

நாட்டில் கரோனா தடுப்பூசித் திட்டம் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அனைத்து மாநிலங்களும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என முனைப்புக் காட்டிவருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சி நிர்வாகம் தனது ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளது.

தங்களின் தடுப்பூசி சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிர்வாகம், முதல் டோஸ் செலுத்தியவர்கள் முறையான நேரத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த முடிவானது மாநகராட்சி ஆணையர் விபின் சர்மா, தானே மேயர் நரேஷ் ஹாஸ்கே ஆகியோர் தலைமையிலானக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

நாட்டில் இதுவரை ஒரு கோடியே ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 74 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 34 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அம்பானி வீட்டுக்கு கையில் பையுடன் வந்த இருவர்; பாதுகாப்பு அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.