ETV Bharat / bharat

காஷ்மீர் சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. தந்தை கொடுத்த பகீர் வாக்குமூலம்..

author img

By

Published : Apr 3, 2023, 3:34 PM IST

Updated : Apr 3, 2023, 5:25 PM IST

காஷ்மீரில் 7 வயது சிறுமி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தந்தை கொடுத்த பகீர் வாக்குமூலம்
தந்தை கொடுத்த பகீர் வாக்குமூலம்

குப்வாரா: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் 7 வயது சிறுமி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டார். குப்வாராவின் குர்ஹாமா ஜாப் பகுதியில் மார்ச் 29ஆம் தேதி இரவு 7 வயது சிறுமியின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் போலீசார் சம்பவிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதோடு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால், போலீசார் சந்தேகத்தின் பேரில் பலரை பிடித்து விசாரித்து வந்தனர். அந்த வகையில் சிறுமியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சிறுமியின் தந்தை முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. அதாவது, அவரே தனது மகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 30 மீட்டர் தொலைவில் உள்ள கொட்டகையில் உடலை வீசி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. அதோடு அவர் தான் தற்கொலை செய்துகொள்ள இருந்ததாகவும், அதற்கு சிறுமி தடையாக இருந்ததால் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாக குப்வாரா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில், குறிப்பிட்ட சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த சமூக மக்கள் பாதுகாப்புக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இதேபோல பாரமுல்லாவின் சோபோர் பகுதியில் 70 வயது தாயை கொலை செய்த மகன் அண்மையில் கைது செய்யப்பட்டார். ஆனால், கொலைக்கான காரணம் தெரியவில்லை. போதையில் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உள்ளூர் கிரிக்கெட்டில் தகராறு - தவறான தீர்ப்பு வழங்கியதாக நடுவர் குத்திக் கொலை

Last Updated :Apr 3, 2023, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.