ETV Bharat / bharat

கர்நாடகா சாலை விபத்து... பிரதமர் நிவாரணம் அறிவிப்பு...

author img

By

Published : Aug 25, 2022, 3:40 PM IST

கர்நாடக மாநிலம் துமகுரு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

PM modi Announces ex gratia from PMNRF for the victims
PM modi Announces ex gratia from PMNRF for the victims

டெல்லி: கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டம் பாலேனஹள்ளி கேட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஆகஸ்ட் 25) சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த விபத்து நெஞ்சை உருக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். அதோடு காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் லாரி கார் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் உயிரிழப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.