ETV Bharat / bharat

வெடிகுண்டு மிரட்டல் - பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு...!

author img

By

Published : Nov 28, 2022, 9:22 AM IST

பெங்களூரு விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு விமான நிலையம்
பெங்களூரு விமான நிலையம்

தேவனஹள்ளி (பெங்களூரு): கர்நாடக மாநிலம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இண்டிகோ விமானத்தின் பயணிகள் இருக்கைகள் டிஸ்யூ பேப்பரில் எழுதிய வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை விமான ஊழியர்கள் கைப்பற்றினர். மிரட்டல் கடிதம் குறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் சென்ற அதிகாரிகள், விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் மிரட்டல் கடிதம் போலி என்பது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய போலீசார், கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்சின் 6E 379 விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் 6D இருக்கைக்கு அருகில் டிஸ்யூ பேப்பரில் எழுதியிருந்த மிரட்டல் கடிதத்தை கைப்பற்றி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் கடிதம் போலி என தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உள்நோயாளிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.