ETV Bharat / bharat

கனடா நாடாளுமன்றத்தில் முன்னாள் நாஜி அதிகாரிக்கு கவுரவம்! மவுனம் கலைத்த ஜஸ்டீன் ட்ரூடோ! அப்படி என்ன சொன்னார்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 7:36 AM IST

Updated : Sep 28, 2023, 11:15 AM IST

நாஜி முன்னாள் அதிகாரி கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மன்னிப்பு கோரி உள்ளார்.

Justin Trudeau
Justin Trudeau

டோரன்டோ : கனடா நாடாளுமன்றத்தில் நாஜி படையின் முன்னாள் அதிகாரி கவுரவிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து உள்ளார்.

இந்தியாவால் தேடும் நபர் என அறிவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த சீக்கிய குழு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாடினார்.

மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறுமாறு ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டது. இதனால் கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கனடா வந்து இருந்தார். அப்போது அவருடன் வந்து இருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹுன்கா கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார். அவருக்கு எம்.பிக்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை அளித்தனர்.

பின்னர், எம்.பிக்களால் கவுரவிக்கப்பட்ட நபர் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர்களுள் ஒருவர் என்றும் செய்தி பரவியது. கனடா நாடாளுமன்றத்தில் நாஜி படையின் அதிகாரி கவுரவிக்கப்பட்டதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச யூத மக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கனடா எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து கனடா நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்டனி ரோட்டோ நிகழ்வுக்கு பொறுப்பேற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தில் நாஜி படையின் அதிகாரி கவுரவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ மன்னிப்பு கோரி உள்ளார். நாஜி படையின் முன்னாள் அதிகாரி கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது சபாநாயகர் தான் முழு பொறுப்பு என்றும் இந்த விவகாரம் கனடா நாடாளுமன்றத்தை முழுவதுமாக சங்கடத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக கூறினார்.

நாடாளுமன்றத்தில் நாஜி படை முன்னாள் அதிகாரிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டியதற்கு வருந்துவதாகவும், அப்போதைய சூழலை பற்றி அறியாமல் செய்திருந்தாலும் இனப் படுகொலையில் உயிரிழந்த யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு வருந்துவதாகவும் என்று கூறி மன்னிப்பு கோரினார்.

மேலும், உக்ரைன் மக்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பது பற்றி தவறான பிரசாரத்தை ஏற்படுத்துவதற்காக, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் இந்த மோசமான சூழமை அரசியலாக்க துடிப்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இந்தியா வர பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பிரச்சினையா? அதான் இவ்வளவு லேட்டா!

Last Updated :Sep 28, 2023, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.