ETV Bharat / bharat

காஷ்மீரில் ஜெய்ஷ்–இ–முகமது பயங்ரவாதி சுட்டுக்கொலை

author img

By

Published : Nov 11, 2022, 9:22 AM IST

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ஜெய்ஷ்–இ–முகமது பயங்ரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

காஷ்மீரில் ஜெய்ஷ்–இ–முகமது பயங்ரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் ஜெய்ஷ்–இ–முகமது பயங்ரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்–இ–முகமது பயங்ரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஷோபியான் போலீசார் தரப்பில், கப்ரென் பகுதியில் பயங்கவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையிருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், இன்று (நவம்பர் 11) பாதுகாப்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பயங்ரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். முதல்கட்ட தகவலில் உயிரிழந்தவர் கம்ரான் பாய் என்கிற ஹனீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதோடு அவர் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.