ETV Bharat / bharat

ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Aug 17, 2021, 3:44 PM IST

நாட்டில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 437 ஆக பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

India COVID-19 tracker
India COVID-19 tracker

டெல்லி : இந்தியாவில் கடந்த 154 நாள்களில் குறைவான கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. 25 ஆயிரத்து 166 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரத்து 679 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். கரோனா பெருந்தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 97.51 விழுக்காடு ஆக உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.

இந்தத் தகவல்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.17) காலை 8 மணிக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 437 ஆக உள்ளது. அந்த வகையில், இதுவரை மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 32 ஆயிரத்து 79 ஆக உள்ளது.

தற்போதுவரை நாட்டில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 146 நாள்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். மேலும் தொற்று பாதிப்பும் 1.15 விழுக்காடு ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 101 பேருக்கு பாதிப்புகள் குறைந்துள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

திங்கள்கிழமை (ஆக.16) மட்டும் 15 லட்சத்து 63 ஆயிரத்து 985 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை 49 கோடியே 66 லட்சத்து 29 ஆயிரத்து 524 பேருக்கு கரோனா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 22 நாள்களுடன் ஒப்பிடுகையில் இது 3 விழுக்காடு குறைவாகும். மேலும் வாரந்தோறும் கணக்கிடுகையில் பாதிப்பு 1.98 விழுக்காடு குறைந்துள்ளது. இது கடந்த 53 நாள்களில் இல்லாத நிலையாகும்.

நாட்டில் 55.47 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 88.13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 437 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக கேரளத்தில் 142, மகாராஷ்ராவில் 100 எனப் பதிவாகியுள்ளது. இது வரை நாட்டில் கரோனா பெருந்தொற்று உயிரிழந்த 4 லட்சத்து 32 ஆயிரத்து 79 பேரில் மகாராஷ்டிராவில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 139 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் கரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு அதிக உயிர்களை பறிகொடுத்த மாநிலங்கள் விவரம் வருமாறு:

வ.எண்மாநிலம்

கரோனா

உயிரிழப்பு

01கர்நாடகா37,007
02தமிழ்நாடு34,547
03டெல்லி25,069
04உத்தரப் பிரதேசம்22,785
05கேரளம்18,743
06மேற்கு வங்கம்18,312

இந்நிலையில், 70 சதவீத உயிரிழப்புகள் இணை நோய்களால் ஏற்படுகின்றன. ஒன்றிய சுகாதாரத் துறையின் அறிக்கைகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒன்றிய அரசின் புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.