ETV Bharat / bharat

'தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி பாக்கி ரூ.1,200 கோடிதான்' - மத்திய நிதியமைச்சர்

author img

By

Published : Dec 21, 2022, 9:15 AM IST

தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

டெல்லி: மாநிலங்களவையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் நேற்று (டிச. 20) பதிலளித்தனர்.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.17,176 கோடி நிலுவையில் இருப்பதாக இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் பேசும்போது, தற்போதைய நிலவரப்படி ஜூன் வரையிலான அனைத்து நிலுவை தொகைகளையும் ஓரளவு செலுத்திவிட்டதால், நிலுவையில் உள்ள ரூ.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட உள்ளது என கூறினார்.

தமிழ்நாட்டிற்கு ஜூன் 2022-ல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1,200 கோடி மட்டுமே. மாநிலத்தின் பயன்பாட்டு சான்றிதழ் கிடைக்கப்பெறாததால் அதை நிலுவை என கருத முடியாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செய்தி எதிரொலி: பாலம் கட்ட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட வரையறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.