ETV Bharat / bharat

ஆந்திராவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு

author img

By

Published : May 28, 2022, 2:10 PM IST

ஆந்திரா அனந்தபூர் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு
ஆந்திராவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு

அமரவாதி: ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள முலைகலேடு கிராமத்தில் இன்று அதிகாலை பெரும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில் ஒரு வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானதுடன், அதையொட்டி இருந்த பக்கத்து வீட்டின் கூரையும் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் உயிரிழந்தனர். மேலும், இருவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து அந்த கிராமத்தையே பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்தவர்கள் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களான தாது (35), ஷர்ஃபுனா (30), ஃபிர்தோஸ் (6), ஜைனுபி (60) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கன்னட பாடல்களை போட்டதால் மணமக்கள் மீது தாக்குதல் - மகாராஷ்டிர அமைப்பு வெறிச்செயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.