ETV Bharat / bharat

டெல்லி ரயில் நிலையத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு - 4 ரயில்வே ஊழியர்கள் கைது

author img

By

Published : Jul 23, 2022, 6:17 PM IST

Updated : Jul 23, 2022, 7:37 PM IST

டெல்லி ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 4 ரயில்வே ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி ரயில்வே நடைமேடை அறையில் இளம்பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல் - 4 ரயில்வே ஊழியர்கள் கைது!
டெல்லி ரயில்வே நடைமேடை அறையில் இளம்பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல் - 4 ரயில்வே ஊழியர்கள் கைது!

டெல்லியை சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே இவருக்கும் ரயில்வே ஊழியர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஊழியர் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக இப்பெண்ணிடம் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி அந்த ரயில்வே ஊழியர், தனது மகனுக்கு பிறந்தநாள். வீட்டில் பார்ட்டி வைத்துள்ளோன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்று இளம்பெண்ணிடம் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் புறப்பட்டுள்ளார்.

அப்போது டெல்லி ரயில் நிலைய வந்த அந்த பெண்ணை முன்கூட்டியே அங்கு காத்திருந்த ரயில்வே ஊழியர் மின் ஊழியர்களுக்காக கட்டப்பட்ட அறைக்கு கூட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து மூவருடன் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: 75 வயது மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 14 வயது சிறுவன் கைது!

Last Updated : Jul 23, 2022, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.