ETV Bharat / bharat

ஆர்எஸ்எஸ் குறித்து கருத்து - பிரபல பாடலாசிரியர் மீது எஃப்.ஐ.ஆர்.

author img

By

Published : Oct 4, 2021, 6:43 PM IST

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறு கருத்து கூறியதாகப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தார் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Javed Akhtar
Javed Akhtar

பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தார், கடந்த மாதம் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தாலிபான் அமைப்புடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்து வலதுசாரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை கிளப்பியது.

ஜாவேத் அக்தார் ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி மும்பை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் தூபே என்ற வழக்கறிஞர் ஜாவேத் அக்தாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜாவேத் அக்தார் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியதாகவும், அவர் மன்னிப்பு கேட்காத நிலையில், தான் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் சந்தோஷ் தூபே கூறியுள்ளார்.

பத்மபூஷன் விருது பெற்ற ஜாவேத் அக்தார் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஐந்து முறையும், பிலிம்பேர் விருதை எட்டு முறையும் வென்றுள்ளார்.

இதையும் படிங்க: கலவர பூமியான லக்கிம்பூர் கேரி - நான்கு கம்பேனி படையினர் குவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.