ETV Bharat / bharat

ஆந்திராவில் பிளாஸ்டிக் கோழி முட்டை?

author img

By

Published : Jul 21, 2021, 1:55 PM IST

நெல்லூரில் போலி கோழி முட்டை விற்பனை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி கோழிமுட்டை விற்பனை
போலி கோழிமுட்டை விற்பனை

ஆந்திரா: நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு அருகே சிலர் 30 முட்டைகளை ரூ.130-க்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில், முட்டையை வாங்கிய பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சமைக்க தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் முட்டை வேகாததால், சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் அந்த முட்டையை எடுத்து உடைத்து பார்த்ததில் பிளாஸ்டிக் போல் இருந்தது. தொடர்ந்து அவர்கள் வரிகுண்டபாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தற்போது காவல் துறையினர் போலி கோழி முட்டை விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி பொருள்கள் தயாரிப்பு - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.