ETV Bharat / bharat

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

author img

By

Published : Nov 5, 2021, 7:10 AM IST

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது
டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தின்போது காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்தாண்டின் குளிர்கால தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ( Central Pollution Control Board - CPCB ) தெரிவித்துள்ளது.

காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. 51-100 இருந்தால் அது திருப்திகரமானது, 101-200 இருந்தால் மிதமானது, 201- 300 இருப்பது மோசமான நிலை, 301-400 மிகவும் மோசமான நிலை, 401-500 கடுமையானது எனக் கருதப்படுகிறது.

காற்று மாசு

டெல்லியில் கடந்த சில நாள்களாகவே காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. நேற்றைய முன் தினத்தின் (நவ.03) நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையான 330ஆக இருந்தது.

நேற்று (நவ.04) காலை 8 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 341ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு சராசரியாக 303 என்கிற அளவில் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அபாய கட்டத்தில் காற்றின் தரம்

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் மோசமாகி வருவது பொதுமக்களுக்கு சுவாச பிரச்னைகளை ஏற்படும் நிலையில், தடைமீறி பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடித்ததாக பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பல இடங்களில் காற்றின் தரம் என்பது அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், டெல்லி முழுவதும் இயந்திரங்கள் மூலம் உயர் கட்டடங்கள், மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 2070க்குள் கரியமிலவாயு மாசு வெளியேற்றம் பூஜ்ஜியமாக்கப்படும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.